Saturday, February 13, 2010

காதலர் தினம் Special : Romantic Pictures, Wallpapers & Animated E-Cards - 2















காதலர் தினம் Special : Romantic Pictures, Wallpapers & Animated E-Cards











Friday, February 12, 2010

காதலர் தினச் சிறப்பு காதல் கவிதைகள் - 2

கவிதை எழுதியவர் :::: மீரா
உச்சிமுதல் பாதம் வரை
உன்னுடைய நினைவுகள்
மெச்சிவிட சொல்லுதடா
மேனியும் கூசுதடா
கன்னதில் முத்தமிட்டாய்
கற்பனையில் சத்தமிட்டாய்
கட்டி அனைக்கவே என்
கைகளில் சிக்கவில்லை
பூட்டிவைத்த ஆசைகளை
பத்திரமாய் சேர்த்து வைப்பேன்
பக்குவமாய் சொல்லிவிட
பாவை இவள் ஏங்குகிறேன்
கட்டழகை சொல்லிவிட
கண்ணன் முகம் காணவில்லை
கைபிடிக்கும் நாளை எண்ணி
காதலில் தான் வாழுகிறேன்...


----------------------------------------------------------------------

என் கவிதை..!

247 எழுத்துக்கள் !!!
ஒரு லட்சம் வார்த்தைகள்!!!
ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான வரலாறு!!!

இத்தனையும் நிறைந்துள்ள என் தாய் மொழி தமிழில் ..
உன் பெயரில் உள்ள நான்கு எழுத்துக்களைத் தவிர
வேறொன்றும் ஞாபகம் வரவில்லை!!!

... உன்னைப் பற்றி கவிதை எழுத நினைத்தபோது ?!!!


--- மகி


---------------------------------------------------------------------


காதல் கவிகள்

***
பெறுநரைச்
சென்றடையாமலேயே
செல்லரித்துப்போன
காதல் கடிதங்களை
மனதிற்குள்ளேயே
சுமக்கும்
அனுப்புநர்களே
மண்ணில் ஏராளம் !
***

நிம்மதியில்லை

என்றதும்
கோவிலுக்குப்
போகச்சொன்னான் நண்பன்!
போனேன்
முதன்முதலில்
அவளைப் பார்த்த
பேருந்து நிறுத்தத்திற்கு!

***

உள்ளாடையைத்
தேர்ந்தெடுக்கக்கூட
இவ்வளவு நேரமா?
நீயெல்லாம்
பெண் பார்க்கப்போனால்...

எத்தனை பெண்தான் பார்ப்பாயோ..
என்பார்கள் நண்பர்கள்!

அவர்களுக்கென்ன தெரியும்
பார்த்த முதல் வினாடியே
உன்னைத்
தேர்வு செய்துவிட்டேன்
என்பது!

***

தெருவே
முகம் சுழித்து
மூக்கைப்
பொத்துகிற வேளையிலும்
நான் மட்டும்
அருகினில் சென்று
ரசித்துப் படிக்கிறேன்
உன் பெயரை
குப்பை லாரியில்!

***

அருவி
மலைக் காதலிக்கு
மழைக் காதலன்
சூட்டிய
மல்லிகை !
***

அவள் எனக்கு பிடிக்கவில்லை !


எத்தனை
பெண் பார்க்கும் படலம்
என்னவளுக்கு ...
விரைவில்
வீட்டில்
சொல்லியாக வேண்டும்!
உன்னை
பார்த்துவிட்டுச் சென்ற
எல்லோரும்
"அவள் எனக்கு பிடிக்கவில்லை"
என்றுதான்
சொல்லியிருக்கிறார்கள் ...
ஆமாம்...
யாருக்குமே
பிடிக்காத உன்னை
எனக்கு மட்டும்
எப்படி பிடித்துப் போனது?
ஓ..
இதுதான்
காதலோ !!!
***
உழவன்


------------------------------------------------------------


வெட்கங்களை அள்ளி பூசிக்கொள்…


மேல் இதழ் முதல்வரி
கீழ் இதழ் மறுவரி
உன் இதழ்கள்
எனக்கான இருவரி கவி
*
நீ
அழகுக்கான
அளவுகோல்!
*
கவிதைகளில்
உண்மையை மட்டும் எழுதிவிடுகிறேன்
உன்னழகை எழுதும் வேளைகளில்.
*
தூண்டிவிடுவது என்னவோ
உன்னழகு
பழி மட்டும் என் மேல்.
*
கைகட்டி அமர்ந்திருக்கிறாய்
நல்ல பிள்ளையாய்;
உன் அழகு போடுகிறது
குத்தாட்டம்!
*
நான் கொள்ளை அடிக்க அடிக்க
கொஞ்சமும் குறைவதில்லை
உன்னிடம் அழகு…
*
உன் அழகுக்கு அழகுகூட்ட
முகப்பூச்சு ஏதும் வேண்டாம்
உன் வெட்கங்களை அள்ளி பூசிக்கொள் போதும்…
*
- ப்ரியன்.

----------------------------------------------------------------------------------



காதலன்றி வேறென்ன? - கண்மணி

- கண்மணி

மாலை மயங்கும் பொழுதில்
மழை சிந்தும் குளிரில்
மாட முற்றத்தில்
நீ தந்து
நான் அருந்தும்
தேநீரில்...

நீண்ட பயணத்தில்
இரவு நேரத்தில்
எதிரெதிர் இருக்கையில்
நீ அனுப்பி
நான் சிலிர்க்கும்
பார்வையில்...

தாளாத தலை வலியில்
தாய் போன்ற உன் மடியில்
தானாக எனை ஏந்தி
நீ தேய்த்து
நான் உணரும்
விரலில்.....

இதோ
இந்த
மூச்சு முட்டும்
நெஞ்சடைக்கும்
தலை சுற்றும்
நம்
முதல் பிரிவில்...

எங்கும்
எதிலும்
நம்மோடு
பின்னி பிணைந்து
வேரோடி
விருட்சமாய்
நிற்பது
காதலன்றி
வேறென்ன?



-----------------------------------------------------------


கறுக்கும் தாஜ்மகால்! - தேஜூ உஜ்ஜைன்

- தேஜூ உஜ்ஜைன்

சிரிக்காதேயேன்
ப்ளீஸ்..!

நீ சிரிக்கையில் சிந்தி விடப்போகின்றன
உன் இதழ் முழுவதும் காத்திருக்கும்
எனக்கான முத்தங்கள்...

உன்னைச் சிரிப்பூட்டவும்
பயமாயிருக்கிறது எனக்கு

*

17 முறை
படையெடுத்துத் தோற்றாலும்
கடைசிப் போரில்
வென்றவன் தான் கஜினி

உன்
காதலைப் பொறுத்தவரை
நான்
கஜினி வம்சம்

*

அப்படிப் பார்க்காதேயேன்
ப்ளீஸ்...

உன்னை தரிசிப்பதை
விட்டுச் சாக
விருப்பமில்லை எனக்கு!

*

தாஜ்மகால்
மெல்ல மெல்ல
கறுத்து வருகிறதாமே...

வருத்தப்படுகிறார்கள்
சுற்றுச்சூழலியளாளர்கள்

நல்ல வேளை
உன்னைத் தாஜ்மகால்
பார்க்கவில்லை

பார்த்திருந்தால்
வெட்கப்பட்டு
உடனே கறுத்திருக்கும்!

*


-----------------------------------------------------------


காதல் கவிதைகள் - தேஜூ உஜ்ஜைன்


- தேஜூ உஜ்ஜைன்

எல்லோருக்கும் புத்தாண்டு
ஜனவரி 1ல் வருகிறது
உனக்கு மட்டும் ஏன்
பிப்ரவரி 14ல்
என்று கேட்கிறார்கள்

சொல்லிவிடவா அவர்களிடம்?
உன்னுடனான என் காதல்
பூத்த தினம்தான்
என் புத்தாண்டு என்று?

*

கல்யாண வீட்டின்
வாசலிலேயே
தயங்கி அமர்ந்துவிட்ட
என்னை
உள்ளே அழைக்கும்
அம்மாவிடம்
எப்படிச்சொல்வது?

உன்னை
நினைவுபடுத்திவிட்ட
ரோஜாக்களை
விட்டுவிட்டு
எப்படி வர
என்று...

*

என்னை வெறுப்பேற்ற
குழந்தையின் கன்னத்தில்
முத்தங்கள்
கொடுத்தாய் நீ...

ஆனால்
உனக்குத் தெரியாமல்
தன்
கன்னங்களை என்னிடம்
கொடுத்துப்போனது
குழந்தை...

*

உன்னுடனான
என் முதல் சந்திப்பில்
நான் சேர்த்து வைத்திருக்கும்
சின்னஞ்சிறு
வால் நட்சத்திரங்களை
உனக்குப் பிரத்யேகமாயப்
பரிசளிப்பேன்
ஒவ்வொரு முறையும்
எனைப்பார்க்க வருகையில்
எடுத்து வந்து
என் கனவில் நீ
விட்டுச்சென்றவை அவை.

*

விளையாடும் போது
அவ்வப்போது
திரும்பி எனைப்பாரேன்
அந்த கணப்பொழுதில்
எனைச் சுற்றியோர்
ஒளிவட்டம் தோன்றுவதாய்ப்
பிரமையேற்படுகிறது எனக்கு

*

---------------------------------------------------------

Thursday, February 11, 2010

ஏ.ஆர்.ரஹ்மானின் காதல் பாடல்கள் ஒரு தொகுப்பு













தமிழ் திரைப்படங்களில் வந்த சிறந்த காதல் பாடல்கள் ஒரு தொகுப்பு - 2

உனக்கென இருப்பேன். உயிரையும் கொடுப்பேன்.
நா.முத்துக்குமார்

படம்: காதல்

உனக்கென இருப்பேன்.
உயிரையும் கொடுப்பேன்.
உன்னை நான் பிரிந்தால்,
உனக்கு முன் இறப்பேன்.
கண்மணியே, கண்மணியே!
அழுவதேன்?... கண்மணியே!
வழித்துணை நான் இருக்க...

கண்ணீர் துளிகளைக், கண்கள் தாங்கும் - கண்மணி
காதலின் நெஞ்சம்தான் தாங்கிடுமா?
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் - என்றுதான்
வண்ணத்துப் பூச்சிகள் பார்த்திடுமா?
மின்சாரக் கம்பிகள் மீதும்,
மைனாக்கள் கூடு கட்டும்,
நம் காதல் தடைகளைத் தாண்டும்.
வளையாமல் நதிகள் இல்லை,
வலிக்காமல் வாழ்க்கை இல்லை,
வரும் காலம் காயம் ஆற்றும்.
நிலவொளியை மட்டும் நம்பி,
இலையெல்லாம் வாழ்வதில்லை,
மின்மினியும் ஒளி கொடுக்கும்!

தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் - தோழியே!
இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்.
தோளிலே நீயுமே சாயும்போது - எதிர்வரும்
துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்.
வெந்நீரில் நீர் குளிக்க,
விறகாகித் தீக் குளிப்பேன்,
உதிரத்தில் உன்னைக் கலப்பேன்.
விழி மூடும் போதும் உன்னை,
பிரியாமல் நான் இருப்பேன்,
கனவுக்குள் காவல் இருப்பேன்.
நான் என்றால் நானேயில்லை,
நீதானே நானாய் ஆனேன்.
நீ அழுதால் நான் துடிப்பேன்.

- நா.முத்துக்குமார்


ஒரு வெட்கம் வருதே வருதே
தாமரை

படம்: பசங்க

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே

போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தடம் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா வருமா
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
கனவென்னக் களவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் நேரம் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
பட பட படவெனவே துடித்துடித்திடும் மனமே
வர வர வரக்கரைத்தாண்டிடுமே

மேலும் சில காலம்
உன் குறும்பிலே நானே தூங்கிடுவேன்
உன் மடியிலே என் தலையணை
இருந்தால் உறங்குவேன்
ஆணின் மனதிற்க்குள் பெண்மை இருக்கிறதே
கூந்தல் அழுத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே
ஒரு வரி சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுந்திடும் காதல் காவியம்
அனைவரும் ஈர்க்கும் நாள் வரும்
(மழை இன்று..)

ஆ.. காற்றில் கலந்து நீ
என் முகத்தினை நீயும் மோதினாய்
பூ மரங்களில் நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்
தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே
நினைத்தப்பொழுதினிலே மரணம் எதிரினிலே
வழிகளில் ஊர்கோலம் இதுவரை நான் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே
(ஒரு வெட்கம்..)

- தாமரை


காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
நா.முத்துக்குமார்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்

காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
ஆழகாய் அய்யோ தொலைந்தேன்

( காதல் வைத்து )

தேவதை கதை கேட்ட போதெல்லாம்,
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு தான்,
நம்பி விட்டேன் மறுக்கவில்லை

அதிகாலை விடிவதெல்லாம்
உன்னைப் பார்க்கும் மயக்கத்தில்தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னைப் பார்த்த கிறக்கத்தில்தான்

( காதல் வைத்து )

உன்னை கண்ட நாள் ஒளி வட்டம் போல்,
உள்ளுக்குள்ளே சுழலுதடி

உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்,
உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்

( காதல் வைத்து )

- நா.முத்துக்குமார்


என் மேல் விழுந்த மழைத் துளியே
வைரமுத்து

படம் : மே மாதம்


என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

என் மேல் விழுந்த மழைத் துளியே...

மண்ணை திறந்தால் நீர் இருக்கும் என்
மனதை திறந்தால் நீ இருப்பாய்

ஒலியை திறந்தால் இசை இருக்கும் என்
உயிரை திறந்தால் நீ இருப்பாய்

வானம் திறந்தால் மழை இருக்கும் என்
மனதைத் திறந்தால் நீ இருப்பாய்

இரவை திறந்தால் பகல் இருக்கும் என்
இமையைத் திறந்தால் நீ இருப்பாய்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக் கொண்டால்
பாஷை ஊமையாய் விடுமோ

என் மேல் விழுந்த மழைத் துளியே...

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

என் மேல் விழுந்த மழைத் துளியே...

- வைரமுத்து


விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
நா.முத்துகுமார்
படம்: அயன்

விழி மூடி யோசித்தால்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணைக் கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

கடலாய்ப் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய்த் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்தக் காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே

ஒ ..ஒ ..ஒ ..

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாகப் பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

ஆசை என்னும் தூண்டில் முள் தான்
மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட
மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றிப் பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ
புது மயக்கம்
இது மாய வலை அல்லவா
புது மோக நிலை அல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னைப் பிடிக்கும்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாகப் பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

- நா.முத்துகுமார்


ஆசையிலே பாத்தி கட்டி
கங்கை அமரன்
படம் : எங்க ஊரு காவல்காரன்

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி..
ஆதரவைத் தேடி ஒரு
பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி..
நானா பாடலியே.. நீதான் பாட வச்சே..

வைகையில் வந்த வெள்ளம் நெஞ்சிலே வந்ததென்ன
வஞ்சி நான் கேட்ட வரம் வந்து நீ தந்ததென்ன
சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து சிந்துதான் பாடுது...
பொன்னுமணித் தேரு நான் பூட்டி வச்சேன் பாரு
கன்னி என்னைத் தேடி நீ அங்கே வந்து சேரு
விதை போட்டேன் அது விளைஞ்சாச்சு
நீ வாயேன் வழி பாத்து

கண்ணுதான் தூங்கவில்லை.. காரணம் தோணவில்லை
பொண்ணு நான் ஜாதி முல்லை பூமாலை ஆகவில்லை
கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்துதான் கூடவில்லை
கூறைப் பட்டு சேலை நீ வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை
ஏஞ்சாமி.. நான் காத்திருக்கேன் என்னை ஏந்த நீதானே

- கங்கை அமரன்


பனி விழும் மலர் வனம்
வைரமுத்து

படம் : நினைவெல்லாம் நித்யா

பனி விழும் மலர் வனம்


பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் தனிமரம் ஏஹே
இனி வரும் முனிவரும்
தடுமாறும் தனிமரம்
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்

சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர் மாலை
சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர் மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும் ஏஹே
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்குச் சிரித்துக் கண்கள் மூடும்

காமன் கோவில் சிறைவாசம்
காலை எழுந்தால் ஹஹஹ பரிகாசம்
காமன் கோவில் சிறைவாசம்
காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே ஏஹே
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இரு விழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

- வைரமுத்து


படம்: தாம் தூம்

பாடல் : அன்பே என் அன்பே

ஆண்: அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்...
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்...
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

(இசை...)

ஆண்: நீ நீ ஒரு நதி அலை ஆனாய்
நான் நான் அதில் விழும் இலை ஆனேன்
உந்தன் மடியினில் மிதந்திட வேண்டும்
உந்தன் கரை தொட பிழைத்திட வேண்டும்
அலையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்...
மனதினிலே இருப்பதெல்லாம்
மவுனத்திலே கலக்கும்... (அன்பே என் அன்பே...)

(இசை...)

ஆண்: நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்துடுவேன்
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்
எதைக் கொடுத்தோம்... எதை எடுத்தோம்...
தெரியவில்லை கணக்கு...
எங்கு தொலைந்தோம்... எங்கு கிடைத்தோம்...
புரியவில்லை நமக்கு... (அன்பே என் அன்பே...)


படம்: பீமா
பாடல் : முதல் மழை


ஆண்: முதல் மழை எனை நனைத்ததே...
முதல் முறை ஜன்னல் திறந்ததே...
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
மனமும் பறந்ததே...
இதயமும்... ஓ.. இதமாய் மிதந்ததே..

பெண்: இம்ம்ம்ம்..
முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
மனமும் பறந்ததே...
இதயமும்.. ம்.. இதயமாய் மிதந்ததே...யே..


ஆண்: கனவோடு தானடி நீ தோன்றினாய்..
கண்களால் உன்னை படம் எடுத்தேன்...

பெண்: ஆ...ஆ..

ஆண்: என் வாசலில் நேற்று உன் வாசனை...
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்...

பெண்: எதுவும் புரியா புது கவிதை...
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்..
கையை மீறும் ஒரு குடையால்..
காற்றோடுதான் நானும் பறந்தேன்..
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்..

ஆண்: முதல் மழை எனை நனைத்ததே..
பெண்: லாலாலாலா..

ஆண்: முதல் முறை ஜன்னல் திறந்ததே..
பெண்: லாலாலாலா..

ஆண்: பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
மனமும் பறந்ததே...
இதயமும்... ஹோய்.. இதமாய் மிதந்ததே...

பெண்: ஓர்நாள் உனை நானும் காணாவிட்டால்..
என் வாழ்வில் அந்த நாளே இல்லை.... ஒ...
ஓர்நாள் உனை நானும் பார்த்தே விட்டால்..
அந்நாளின் நீளம் போதவில்லை....

ஆண்: இரவும் பகலும் ஒரு மயக்கம்..
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்..
உயிரின் உந்தன் நெருக்கம்....
இறந்தாலுமே என்றும் இருக்கும்..
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்...

பெண்: ஊ.....
ஆண்: பெயரே தெரியாத பறவை அழைத்ததே....

பெண்: ஊ.....
ஆண்: இதயமும்... ஹோய்... இதமாய் மிதந்ததே...

- நா.முத்துக்குமார்

Wednesday, February 10, 2010

தமிழ் திரைப்படங்களில் வந்த சிறந்த காதல் பாடல்கள் ஒரு தொகுப்பு

வாராயோ வாராயோ காதல் கொள்ள‌
தாமரை
படம்: ஆதவன்

வாராயோ வாராயோ காதல் கொள்ள‌
பூவோடு பேசாத காற்று இல்ல‌
ஏனிந்தக் காதலும் நேற்று இல்ல‌
நீயே சொல் மனமே

வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே என்னோடு வா தினமே

இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்
உனைக் காதல் கண்கள் தேடும்

ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை

உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சின்ரல்லா

வாராயோ வாராயோ காதல் கொள்ள..

நீயே நீயே அந்த ஜுலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்

தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே

நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வா வா வா வா என் காதல் ஜோதி

நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ
- தாமரை



முன்தினம் பார்த்தேனே
தாமரை
படம்: வாரணம் ஆயிரம்

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ
நாட்களும் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென

துலாம் தொட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாம் பாரம் தோற்காதோ பேரழகே

முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அழைக்காமல் போவேனோ வா உயிரே
ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு
விடை சொல்லடி

கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மாறுதோ நேரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரொன்று உரைய கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்க்காலமே
- தாமரை


மன்றம் வந்த தென்றலுக்கு
கவிஞர் வாலி
படம்: மௌன ராகம்


மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்ச்ம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதென்னும்
வானம் உண்டோ சொல்

தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்

மேடையைப் போலே வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஒடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா

- கவிஞர் வாலி



கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
நா.முத்துக்குமார்
படம்: 7ஜி ரெயின்போ காலணி


கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

காட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை
மின்னலின் ஒலியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்த பின்னே நுரைகல் மட்டும் கரைக்கே சொந்தமடி

உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
பனி துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்களெல்லாம்
ஆட புடவை கட்டி பெண்ணானது
புயல் அடித்தால் மழை இருக்கும்
மரங்களில் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லையே
கண் பேசும் வார்த்தை .......

- நா.முத்துக்குமார்


கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
தாமரை
படம் : சுப்ரமணியபுரம்


கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

- தாமரை


என்ன விலையழகே
கவிஞர் வாலி
படம் : காதலர் தினம்

என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல் மௌளனமாகிறேன்

படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என்னுடன் சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகுக்கில்லை ஈடு

உயிரே உனையே நினைத்து விழினீர் மழையில் நனைந்து
இமையில் இருக்கும் இரவு உறக்கம்
கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்
உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே
உன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
உன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
நல்ல நாள் உனைச் சேரும் நாள்தான்

- கவிஞர் வாலி


நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!
தாமரை
படம்: வாரணமாயிரம்


நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!
நீருக்குள் மூழ்கிடும் தாமரை!
சட்டென்று மாறுது வானிலை!
பெண்ணே உன் மேல் பிழை!!!

நில்லாமல் வீசிடும் பேரலை!
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை!
பொன்வண்ணம் சூடிய காரிகை!
பெண்ணே நீ காஞ்சனை!!!

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா!

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ?!
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ?!
என்னோடு வா வீடு வரைக்கும்!
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்!

இவள் யாரோ யாரோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
இது பொய்யோ மெய்யோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
(நெஞ்சுக்குள்...)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்!
ஏக்கங்களை தூவிச் சென்றாள்!
உன்னை தாண்டி போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வேறு!
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே!
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே!
காதல் எனை கேட்கவில்லை!
கேட்டால் அது காதல் இல்லை!

என் ஜீவன் ஜீவன் நீதானே!
என தோன்றும் நேரம் இதுதானே!
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே!
(நெஞ்சுக்குள்..)

- தாமரை



உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
வைரமுத்து
படம்: அமர்க்களம்


உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே
நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிரு
நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிரு
நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது
நீ ஈரமான பாறை உள் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ


-வைரமுத்து


முன் பனியா? முதல் மழையா?
பழனிபாரதி
படம் : நந்தா


முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே .... உயிர் நனைகிறதே....!
புரியாத உறவில் நின்றேன்!
அறியாத சுகங்கள் கண்டேன்!
மாற்றம் தந்தவள் நீதானே!

மனசில் எதையோ மறைக்கும் கிளியே!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே!
கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு?
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே.....!

என் இதயத்தை ... என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்!
உன் விழியினில்... உன் விழியினில் அதனை,
இப்போது கண்டு பிடித்து விட்டேன்!
இதுவரை எனக்கில்லை முகவரிகள்!
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்..!
வாழ்கிறேன்... நான் உன் மூச்சிலே.....!

சலங்கை குலுங்க ஓடும் அலையே!
சங்கதி என்ன சொல்லடி வெளியே!
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
நெலவ புடிச்சுக்க நெனைப்பது எதுக்கு?
ஏலோ ஏலோ... ஏலே ஏலோ....!

என் பாதைகள் .... என் பாதைகள்
உனது வழி பார்த்து வந்து முடியுதடி!
என் இரவுகள், என் இரவுகள்
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி!
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்!
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்!
மூழ்கினேன் .... நான் உன் கண்ணிலே...!

- பழனிபாரதி

காதலர் தினச் சிறப்பு காதல் கவிதைகள் - 1

நம் காதல்

உன் உச்சந்தலைபரப்பு எனும் சோலையில் விழித்தெழுந்து !!!

உன் நெற்றிபரப்பு எனுன் தகவல் பலகையில் என் நிகழ்ச்சி நிரலை தெரிந்துகொண்டு !!!

உன் விழிகள் எனும் சூரிய ஒளியில் என் பயணத்தின் பாதையை அறிந்து கொண்டு !!!

உன் உதடுகளின் அசைவினால் உற்பத்தியாகும் கட்டளைகளை கவனத்தில் கொண்டு !!!

உன் காதின் பொன் வளையங்கள் எழுப்பும் ஓசையின் உதவி கொண்டு !!!

உன் இதயத்தை மட்டுமே இலக்காக நினைத்து கொண்டு !!!

இவ்வுலக முடிவுவரை நான் மேற்கொள்ள விரும்பும்
வெற்றிப் பயணம் !!!!!!

"நம் காதல் "


--- மகி

இதயத்தில் என்னவள்

சுற்று

சூரியனை சுற்றும் பூமியாய்
"நான்"
நான் சுற்றி வரும் சூரியனாய்
"நீ"
----மகி

அழகிய வனவாசம்

ஒளிபுகமுடியாத அடர்ந்த காடு.....

அதை
நான்கே ஈரடுக்கு அறைகளாக பிரிக்கும் கொடிகள்!

அதனுள்
எப்பொழுதும் இடைவிடாது பாயும் ஆறு!

அதை
பாதுகாக்க வரிசையாய் போர்வீரர்கள்!

அவர்களுக்கு
பாதுகாப்பாக மேல் போர்த்திய கவசம்!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த வனத்தில்

வனவாசம் செய்யும் தேவதையாய் ! என்னவளே நீ !

என் இதயத்தில் எப்போதும் நீ, நீ மட்டும் தான்!

--- மகி

காதல் - ஓர் அதிசயம்

காதல்!!!
இந்த மூன்று எழுத்து மந்திரச்சொல்
எத்தனை வேலைகள் செய்கிறது!!!!

ஓர் இளைஞனின் உயிரைத்தட்டித் திறக்கும் சாவியாய்!

ஒருவனுக்கு தாரம் எனும் இன்னொரு தாயைத் தரும் கடவுளாய்!

வழி தெரியாத ஒருவனுக்கு திசைகாட்டும் கருவியாய்!

அமாவாசையின் இருளில் ஓர் அதிசய நிலவொளியாய்!

சூரியனில் மிதக்கும் வானவில்லின் வர்ணஜாலமாய்!

உயிருக்குள் இன்னொரு உயிராய்!

காதல்!!!
ஓர் அதிசய வேதியியல் மாற்றம் !!!!!!...........

--- மகி


ஓர் இதயத்தின் ஊஞ்சலாட்டம்.....


போதிமரத்தடியில்
உச்சிப்பிள்ளையார்
தேடுகிறேன்!

ஆலமரத்தடியில்
ஆழ்ந்த அறிவைத்
தேடுகிறேன்!

---
கணிப்பொறியின் ஒளித்திரையில்
உன் கூந்தலின் ஒற்றை ரோஜா
தேடுகிறேன்!

விண்வெளியில் வேறொரு நிலவை
விரட்டி விரட்டித்
தேடுகிறேன்!

---
கருப்பு வெள்ளை
வானவில் காண்கிறேன்!

கலவை நிறத்தில்
நிலவை ரசிக்கிறேன்!

---
வெளிச்சக்கூட்டில் ஒளிந்து கொள்ள
ஓர் மறைவைத்
தேடுகிறேன்!

விதவை வானில் விடிய விடிய
வெளிச்சம்
தேடுகிறேன்!

---
உன் வீட்டு வாயில் திறக்கும் வேளையில்
செவ்வாயில்
ஜீவிக்கிறேன்!

கடவாயில் நீர் வடிய
கனவுலகில்
நான் வசிக்கிறேன்!

---
ஒரு காலில் ஆண் செருப்பும்
மறுகாலில் பெண் செருப்புமாய்
ஜோடி சேர்த்துப் பார்க்கிறேன்!

தொலைபேசி சிரிக்கும்போதெல்லாம்
தொடர்பில் நீ இல்லையென்றால்
தொலைந்து போகிறேன்!

---
என் கவிதைத் தொகுப்பிற்குள்
உன் கால் கொலுசின்
தடம் தேடுகிறேன்!

என் இளமை பூந்தோட்டத்தில்
உன் உருவத்தில்
மலர் தேடுகிறேன்!

---

பிறப்பின் மகிழ்ச்சிக்கும்
இறப்பின் இரங்கலுக்கும்
இடையில்
என் இனிய இளமைப் பருவத்தில்
ஏன் இந்த இதயத்தில்
ஊஞ்சலாட்டம் ?.....


காதலிக்கத் தொடங்கிவிட்டேனா ?????.....

----- மகி


நீ

ஒவ்வொரு நாளின்
தொடக்கமும், முடிவும்,
உன் முகமே தெரிகிறது !!!!!

சந்திரன், சூரியன் வடிவில் "நீ"

உலகம் சுற்றும் வாலிபன்

நான் தான் உண்மையான
" உலகம் சுற்றும் வாலிபன் " !!!!!!!
என் உலகமாய்

"நீ"


-
மகி

பொறாமை

மலர்கள்.....
தற்கொலை செய்து கொள்ளும் அதிசயம்.....!!!!!
உன் வீட்டில் மட்டுமே காண கிடைக்கும்...????
உன் மேல் பொறாமை!!!!!!!!!!!

-மகி

தேடல்

தேடுதலில் தொடங்கி....
தேடுதலிலேயே முடியும்.....
இம்மனித வாழ்க்கையில் .,
நான் தேடிக்கண்டறிந்த அரிய பொக்கிஷம்.,,,

நீ .......!!!!

கண்ணாடி

என் வீட்டுக்கண்ணாடிக்கு இனி வேலையில்லை.....
என் முகம் பார்க்கிறேன்!
உன் முகத்தில் !!!!

Monday, February 8, 2010

உலகின் தலைசிறந்த மேதைகளின் காதல் வரிகள் - 3


Love Quotes 26 True love is a discipline in which each divines the secret self of the other and refuses to believe in the mere daily self. - William Butler Yeats


Love Quotes 27 You can give without loving, but you can never love without giving.


Love Quotes 28 Ah, lady, when I gave my heart to thee,
It passed into thy lifelong regency. - Gilbert Parker


Love Quotes 29 Loving is never a waste of time. - Astrid Alauda


Love Quotes 30 Poetry spills from the cracks of a broken heart, but flows from one which is loved. - Christopher Paul Rubero


Love Quotes 31 Love is like those second-rate hotels where all the luxury is in the lobby. - Paul-Jean Toulet


Love Quotes 32 The heart is a small thing, but desireth great matters. It is not sufficient for a kite's dinner, yet the whole world is not sufficient for it. - Francis Quarles, Emblems


Love Quotes 33 Immature love says, "I love you because I need you." Mature love says, "I need you because I love you." – Erich Fromm


Love Quotes 34 Great love affairs start with Champagne and end with tisane. - Honoré de Balzac


Love Quotes 35 Two things only a man cannot hide: that he is drunk and that he is in love. – Antiphanes


Love Quotes 36 Love is like a friendship caught on fire. In the beginning a flame, very pretty, often hot and fierce, but still only light and flickering. As love grows older, our hearts mature and our love becomes as coals, deep-burning and unquenchable. - Bruce Lee


Love Quotes 37 You will find as you look back upon your life, that the moments when you have really lived, are the moments when you have done things in the spirit of love. – Henry Drummond


Love Quotes 38 True love is like ghosts, which everyone talks about and few have seen. - François, duc de La Rochefoucauld


Love Quotes 39 Tell me how many beads there are
In a silver chain
Of evening rain,
Unravelled from the tumbling main,
And threading the eye of a yellow star:
So many times do I love again.
- Thomas Lovell Beddoes


Love Quotes 40 I learned the real meaning of love. Love is absolute loyalty. People fade, looks fade, but loyalty never fades. You can depend so much on certain people, you can set your watch by them. And that's love, even if it doesn't seem very exciting. - Sylvester Stallone


Love Quotes 41 What "love” is I don't know if it's not the response of our deepest natures to one another. - William Carlos Williams


Love Quotes 42 Love is the condition in which the happiness of another person is essential to your own. - Robert Heinlein


Love Quotes 43 At the touch of love, everyone becomes a poet. - Plato


Love Quotes 44 What the world really needs is more love and less paper work. – Pearl Bailey


Love Quotes 45 Love in action is a harsh and dreadful thing compared with love in dreams. - Fyodor Dostoevski


Love Quotes 46 We waste time looking for the perfect lover, instead of creating the perfect love. - Tom Robbins


Love Quotes 47 A man is not where he lives, but where he loves. - Latin Proverb


Love Quotes 48 Love is the poetry of the senses. - Honoré de Balzac


Love Quotes 49 Without love, the rich and poor live in the same house.


Love Quotes 50 Love withers under constraints: its very essence is liberty: it is compatible neither with obedience, jealousy, nor fear: it is there most pure, perfect, and unlimited where its votaries live in confidence, equality and unreserve. - Percy Bysshe Shelley

Friday, February 5, 2010

உலகின் தலைசிறந்த மேதைகளின் காதல் வரிகள் - 2

Best Love Quotations:

Love Quotes 1 - I love you, not only for what you are, but for what I am when I am with you. - Roy Croft

Love Quotes 2 - Love is, above all, the gift of oneself. - Jean Anouilh

Love Quotes 3 - You never lose by loving. You always lose by holding back. - Barbara DeAngelis

Love Quotes 4 - When the power of love, overcomes the love of power, the world will know peace. - Jimi Hendrix

Love Quotes 5 *Of all forms of caution, caution in love is perhaps the most fatal to true happiness. - Bertrand Russell

Love Quotes 6 Love doesn't make the world go round. Love is what makes the ride worthwhile. - Franklin P. Jones

Love Quotes 7 A lover is a man who tries to be more amiable than it is possible for him to be. - Nicholas de Chamfort

Love Quotes 8 I need the starshine of your heavenly eyes,
After the day's great sun. - Charles Hanson Towne

Love Quotes 9 Love is not consolation. It is light. - Friedrich Nietzsche

Love Quotes 10 True love stories never have endings. - Richard Bach

Love Quotes 11 If you love something, set it free; if it comes back it's yours, if it doesn't, it never was. - Richard Bach

Love Quotes 12 True love comes quietly, without banners or flashing lights. If you hear bells, get your ears checked. - Erich Segal

Love Quotes 13 Love floods us with hope. - Jareb Teague

Love Quotes 14 For you see, each day I love you more. Today more than yesterday and less than tomorrow. - Rosemonde Gerard

Love Quotes 15 Love is a game that two can play and both win. - Eva Gabor

Love Quotes 16 How on earth are you ever going to explain in terms of chemistry and physics so important a biological phenomenon as first love? - Albert Einstein

Love Quotes 17 Never close your lips to those whom you have opened your heart. - Charles Dickens

Love Quotes 18 It's easy to fall in love. The hard part is finding someone to catch you. - Bertrand Russell

Love Quotes 19 You come to love not by finding the perfect person, but by seeing an imperfect person perfectly. - Sam Keen

Love Quotes 20 In this horror of solitude, this need to lose his ego in exterior flesh, which man calls grandly the need for love. - Charles Baudelaire

Love Quotes 21 Love me and the world is mine. - David Reed

Love Quotes 22 A love like ours could never die.
As long as I have you near me. - The Beatles - "And I love Her”

Love Quotes 23 If you judge people, you have no time to love them. – Mother Teresa

Love Quotes 24 There's nothing more freeing than the shackles of love. - Emma Racine deFleur

Love Quotes 25 It is better to break one's heart than to do nothing with it. – Margaret Kennedy


Thursday, February 4, 2010

காதலிக்கு அனுப்ப Romantic SMS Collections - (Part VI)


Love sms #21 - Hearts beat 72 times a min,
Even if ur heart beats only once a min,
U'll stil live coz 71 times my heart beats 4u..
Good Morning & Have a good day.


Love sms #22 - Roses of red grow in my heart and they will never wither... 'Cause they bloom every time I see your smile, hear your voice or just think of you!


Love sms #23 - So many questions, but the answers are so few, all i really know, is, I MISS YOU !


Love sms #24 - There are times when I fall in love with someone new, but I always seem to find myself back in love with you.


Love sms #25 - If nothing lasts forever, will you be my nothing?


Love sms #26 - I will love you until my heart stops beating.


Love sms #27 - You showed me how it is to be loved. Now I know what really love is. 1 day we will be together forever. I can't wait to hold you in my arms again.


Love sms #28 - It is not being in love that makes me happy... but is being in love with YOU that makes me happy.


Love sms #29 - Sweet as a rose bud bright as a star cute as a kitten thats what u are.bundles of joy sunshine and fun you are everything i luv all rolled into 1.


Love sms #30 - Just had to let you know... you're the best! I love you!


Love sms #31 - Without your LOVE, dayz are "Saddy, Moanday,Tearsday, Wasteday, Thirstday, Frightday, Shatterday".


Love sms #32 - You know what, in the whole world there is no such darling whom I love and I want the whole world to know that I will never forget you!


Love sms #33 - Last night I sent an angel 2 watch over u while u were sleeping but it came back early! So I asked it why? It said that angels don't watch over other angels!


Love sms #34 - You are like the sunshine so warm, you are like sugar, so sweet.. you are like you.. and that's the reason why I love you!


Love sms #35 - I feel something in my heart, it's like a little flame, every time I see you, this flame lights up, this flame is special for you, because I LOVE YOU!


Love sms #36 - Love is to think about someone else more times in a day than you think about yourself.


Love sms #37 - You are always in my heart, here and everywhere, There is no one in the whole world that makes me feel this way.


Love sms #38 - It's hard to find someone whom you truly love, much less to find someone who loves you as much.
When the chance comes, don't ever let go.


Love sms #39 - Love is when you don't want to go to sleep because reality is better than a dream.


Love sms #40 - If you love someone, you give everything you can and don't expect to receive anything in return.


Love sms #41 - No one is too young for love, because love doesn't come from your mind, which knows your age, but from your heart, which knows no age.


Love sms #42 - Love can touch you just one time but it can last for a life time.


Love sms #43 - Rains fall, winds blow, the sun shines... it all comes naturally, just like loving you.


Love sms #44 - I love you from the bottom of my heart. Be mine forever..


Love sms #45 - Love doesn't make the world go round, it just makes the ride worthwhile.


Love sms #46 - True love is like ghosts, which everybody talks about and few have seen.


Love sms #47 - There are 3 steps to happy happiness: 1 you. 2 me. 3 our hearts 4 eternity!


Love sms #48 - Love is like a butterfly. It goes where it pleases and it pleases where it goes.


Love sms #49 - I looked at a flower and thought it was the most beautiful thing I've ever seen till I met you.


Love sms #50 - I'm a PAPER, u can write ur feelings,
scribble ur anger, use me 2 absorb tears.
Don't throw me after use but
when u feel cold burn me to feel warm coz I Luv U.


Wednesday, February 3, 2010

காதலிக்கு அனுப்ப Romantic SMS Collections - (Part V)

Love sms #1 - Wish I was your blanket, I wish I was your bed, I wish I was your pillow underneath your head, I wanna be around u, I wanna hold u tight, & b the lucky person who kisses u good night.


Love sms #2 - As I lie awake in my bed. All sorts of thought run through my head, Like why do I love you as much as I do. Then I realise its because you are you!


Love sms #3 - Even though we are not together this Valentines Day but I'll be with you wherever you go. Love you always.You have opened the doors of my heart. Now it's for you to walk through it.


Love sms #4 - A special smile a special face.a special someone i cant replace.i luv u i always will.uve filled a space no one can fill!


Love sms #5 - If you truly love someone,
then the only thing you want
for them is to be happy
even if its not with you.

Love sms #6 - Smile is a language of love,
smile is a source to win heart,
smile is a name of lovely mood,
smile create greatness in personality
so keep smiling


Love sms #7 - U may be out of my sight, but not out of my heart. U may be out of my reach, but not out of my mind. I may mean nothing to u, but u'll always be special to me.


Love sms #8 - Can I say I love you today? If not, can I ask you again tomorrow? And the day after tomorrow? And the day after that? Coz I'll be loving you every single day of my life.


Love sms #9 - People say you only fall in love once, but when I hear your voice I fall in love all over again.


Love sms #10 - Love, knows no reason, knows no time, it has a sole intention of bringing people together to a time, called FOREVER..


Love sms #11 - There are a million stars and a million dreams, you are the only star for me, the only dream i dream.


Love sms #12 - Don't fall in love with someone you can live with, fall in love with someone you can't live without.


Love sms #13 - Love knows no reasons, Love knows no lies, Love defines all reasons, Love has no eyes..
But love is not blind, Love sees all but doesn't mind.


Love sms #14 - Meeting you was fate, becoming your friend was choice, but falling in love with you was completely out of my control.


Love sms #15 - Don't ever doubt your trust in me, I'll give you my heart so honestly.


Love sms #16 - Distance is 1 thing that keeps us apart. But u will always remain in my heart!


Love sms #17 - Lovely roses and Lovely you..
and Lovely r the things u do..
but the loveliest is the frindship of the two
….one is ME and other is YOU.


Love sms #18 - Falling in love with you was the easiest thing I've done in my life.


Love sms #19 - Hand in hand and heart to heart my love for you shall never part.


Love sms #20 - Just when I thought it couldn't get better, you prove me wrong! I love you!